search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிக்கல் நாட்டுகிறார்"

    திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். #SivanthiAditanar #Manimandapam
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆதித்தனார் கல்லூரி அருகில் உள்ள சிவந்தி அகாடமி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் செலவில் மணிமண்டம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. பின்னர் விழா தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருச்செந்தூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாமர மக்களும் கல்வி அறிவு பெறும் வகையில், தமிழ் வளர்த்து சேவை செய்த சி.பா.ஆதித்தனாரை போன்று, அவருடைய மகன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரும் மக்களுக்கு சேவை செய்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #SivanthiAditanar #Manimandapam

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று நேபாளம் சென்றுள்ளார். அங்கு நீர் மின்நிலைய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். #Modi #ModiNepalVisit
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக இன்று நேபாளம் புறப்பட்டுச் சென்றார். நேபாள நாட்டு பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவில் இருந்து புறப்பட்டு, நேபாளத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான ஜனக்பூருக்கே நேரடியாக  பிரதமர் மோடி செல்கிறார். அங்கிருந்து முக்திநாத் புறப்படும் மோடி, அதற்கு முன்பாக சிறப்பு வழிபாட்டிலும் ஈடுபடுகிறார்.

    முக்திநாத்தில் இருந்து காத்மாண்டு செல்லும் பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி, துணை ஜனாதிபதி நந்த பகதூர் புன், பிரதமர் ஒலி உள்ளிட்ட தலைவர்களுடன் பேச உள்ளார்.  

    மூன்று ஆண்டுகளில், பிரதமர் மோடி நேபாளம் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும். இந்த சுற்றுப்பயணத்தின்போது ஜனக்பூரில் இருந்து அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை தொடங்கி வைக்கிறார். ஷர்மா ஒலியுடன் இணைந்து 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர் மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.



    மோடியை வரவேற்கும் வகையில் காத்மாண்டு நகரில் வரவேற்பு வளைவுகள், இரு நாடுகளின் தேசியக்கொடிகள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மோடியை பார்ப்பதற்காக ஜனக்பூரின் பார்பிகா மைதானத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர்.  #Modi #ModiNepalVisit

    ×